More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
May 26
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன.



பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நோயியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான லூக் மாண்டேக்னியர் கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்திடுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளுடன் லூக் நேர்காணல் வீடியோவும் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் லூக் பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை பற்றி கேள்வி எழுப்புகிறார். "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள், பெருந்தொற்று காலக்கில் தடுப்பூசி போடுவது நினைத்து பார்க்க முடியாத தவறு.



உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போட துவங்கியபின் உருமாறிய கொரோனா தீவிரம் அடைவதும், பெருந்தொற்று அதிகமாவது, மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இது பதிவாகும்," என அவர் கூறுகிறார். 



இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிர வைக்கும் நேர்காணலில், உலகின் முன்னணி நோயியல் வல்லுநர் இவ்வாறு கூறியிருக்கிறார். இனியும் நம்பிக்கையில்லை." எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்புகிறார். மேலும் இது மருத்துவ பிழை என குறிப்பிடுகிறார். எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை. 



போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும

Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Mar08

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Jan19

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar21

மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Feb03

இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Mar03

 

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய

May26

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 13 (05:09 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 13 (05:09 am )
Testing centres