ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபத்தை குறைப்பதற்கு அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன.
மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல் கூட கடுங்கோபம் ஏற்படுகிறது.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும்.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாக கோபப்பட்டு பலரும் பழகி இருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் 5 நிமிடம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைக
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
