இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள் ட்வின்ஸ் அதாவது ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
