ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் உயிரிழந்த நிலையில், ஷேன் வார்னே மரணத்தில் அவரின் 3 நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்துள்ளன.
ஷேன் வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தான் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது, வார்னே இரவு உணவிற்கு வராததால் அவரை தேடிச்சென்ற நண்பர்கள், அங்கு எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வார்னே கிடந்ததை கண்டுள்ளனர்.
இதனையடுத்து வார்னேவுக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்து அது பலனளிக்காததால்,ஆம்புலன்ஸை அழைத்ததாக நண்பர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வெளியான அடாப்சி ரிப்போர்ட்டிலும் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
எனினும் இந்த மரணத்தில் பொலிசாருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இதனையடுத்து மருத்துவ ரிப்போர்ட்களை கணக்கில் எடுக்காமல் இன்று அந்த 3 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்போவதாக தாய்லாந்து காவல் துறை அறிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
