அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளன. ஆனால் இந்த தகவல் பொய்யில்லை. ஒரே வீட்டில் இவர்கள் அனைவரும் வசித்து வருவதாக கூறப்படுகின்றமை நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர்.
இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி) செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.
இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான் என மகிழ்வுடன் கூறுகின்றாராம்.
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
