More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்
இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்
Jan 25
இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் அந்நிய  செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.



இவ்வாறு தொடர்ந்து சிக்கலை அனுபவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்தவகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏற்கனவே 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) நிதியுதவி வழங்கப்பட்டது.



மேலும் இந்தியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,700 கோடி) கூடுதலாக அளிக்கப்பட்டது.



இதைத்தவிர இலங்கையின் மொத்த கையிருப்பை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்று வசதியை இந்தியா அறிவித்தது. அத்துடன் 515 மில்லியன் டாலர் ஆசிய நாணய யூனியன் தீர்வையும் ஒத்திவைத்தது.



இந்த உதவிகளால் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கரைவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக இலங்கையின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.



இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரம் கோடி) நிதியுதவி கேட்டிருப்பதாகவும், இது கிடைக்கும் என நம்புவதாகவும் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் தெரிவித்தார்.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘டெல்லியில் இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன், இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக நாம் ஒரு உதவியை பெற முடிந்தது. அதைப்போல மேலும் 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.



இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக சர்வதேச நிதியத்தை அணுகும் வாய்ப்பும் இருப்பதாக கூறிய பெரீஸ், அந்த நிதியத்தின் உறுப்பினராக நாம் இருப்பதால், அதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன என்றும் கூறினார்.



இலங்கையில அன்னிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், முற்றிலுமாக அது தீர்ந்து விடவில்லை எனவும் அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக

Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Feb09

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ

Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

Jan24

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Mar01

பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,

Feb16

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட

Feb15

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Feb03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 25 (05:54 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 25 (05:54 am )
Testing centres