ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் செய்யும் வகையில், `இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கிண்டலடித்துள்ளார். ஒன்றிய அரசின் சொத்துக்களை ஏலம் விட்டு நிதி திரட்டும் ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தின் மூலம், நாட்டின் சொத்துக்களை தனது பணக்கார முதலாளித்துவ நண்பர்களுக்கு மோடி தாரை வார்த்து வருவதாகவும், 70 ஆண்டுகளாக பிற கட்சிகள் சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மோடி அரசு விற்று வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `எந்தவொரு அரசும் நாட்டின் இயற்கை வளத்தை எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் பெருக்க செய்வார்கள். ஆனால், மோடி அரசு அவருடைய முதலாளி நண்பர்கள் லாபம் அடையும் வகையில் மதிப்பு மிக்க நமது சொத்துக்களை அழித்து வருகிறார். முதலில் மனசாட்சியை விற்றார். தற்போது…,’ என்று கூறியுள்ளார். மேலும், ‘இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள