More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தலிபான்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஆக.31க்குள் அமெரிக்க படை வாபஸ் - அமெரிக்க அதிபர் பைடன்
தலிபான்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஆக.31க்குள் அமெரிக்க படை வாபஸ் - அமெரிக்க அதிபர் பைடன்
Aug 26
தலிபான்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஆக.31க்குள் அமெரிக்க படை வாபஸ் - அமெரிக்க அதிபர் பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பே பொருத்தே முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் பைடன் திடீரென அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க, நேட்டோ படைகள் வரும் 31ம் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்துள்ளார். தற்போது, தலிபான்கள், அங்கு ஆட்சியை பிடித்துள்ளனர்.அங்கிருந்து வெளியேறி வரும் மக்களை காபூல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவ விமானங்கள் பாதுகாப்பாக மீட்டு வருகின்றன.



இதனிடையே, தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபைஹூல்லா முஜாகித், `அமெரிக்க படைகள் கூறிய தேதியில் வெளியேறாவிடில், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,’ என்று எச்சரித்தார். அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவ தற்கான கெடு முடிய இன் னும் 5 நாட்களே உள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ``அமெரிக்க படைகள் வெளியேறும் திட்டத்தை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். இதில் எந்தளவுக்கு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது பற்றி தெரியும். தலிபான்கள் உண்மையிலேயே கடும் சவாலாக இருப்பார்கள். எனவே, அவர்களின் ஒத்துழைப்பை பொருத்தே அங்கிருந்து அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவது பற்றி முடிவு எடுக்க முடியும்,’’ என்றார்.



சீனா, தலிபான் முதல் பேச்சு

தலிபான் அரசியல் பிரிவின் துணை தலைவர் அப்துல் சலாம் ஹனபி, ஆப்கானிஸ்தானுக்கான சீன தூதர் வாங் யீ இடையே காபூலில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் ``சீனா, ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் இடையே தடையற்ற, பயனுள்ள தொடர்பு மற்றும் ஆலோசனை நடந்தது. காபூல் சீனாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்கானிஸ்தானை கட்டமைக்கவும், அங்கு அமைதி நிலவவும் சீனா ஒத்துழைப்பு அளிக்கும்,’’ என்று தெரிவித்தார்.



* முப்படை தலைமை தளபதி அதிர்ச்சி

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், ``ஆப்கானிஸ்தானை தலிபான்கள் குறுகிய காலத்தில் கைப்பற்றியது அதிர்ச்சி அளிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் குவாட் நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்,’’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06


உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி

Mar07

ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற

Oct25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

Jun16

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ

Jun23

கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார

Feb11

பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள

May10

ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை

Feb04

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க

Mar09

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்

Apr14

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய

Oct03

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை

Mar05

 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா

Feb22

உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 20 (21:06 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 20 (21:06 pm )
Testing centres