நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு சுகாதார ஊழியர்கள் தொற்றுறுக்குள்ளாகும் போது சுகாதாரத்துறை துரிதமாக சரிவடையக் கூடும் என்பதால் , சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போது நாட்டில் நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு சுகாதார ஊழியர்கள் தொற்றுறுக்குள்ளாகும் போது சுகாதார கொள்ளளவும் பாதிப்படையக் கூடும்.
இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் சுகாதார ஊழியர்கள் பெரும்பாலும் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றவர்களாக உள்ளனர்.
எனவே அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிப்பதற்கு செயலூட்டியாக மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்துகின்றோம்.
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்