More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணாமல்போனோரில் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர் -தினேஷ்குணவர்தன
காணாமல்போனோரில் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர் -தினேஷ்குணவர்தன
Aug 14
காணாமல்போனோரில் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர் -தினேஷ்குணவர்தன

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் எனது தகவல்கள் கிடைத்துள்ளன.



-என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.



இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்



அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-



காணாமல்போனதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான நபர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதை நிரூபிக்கத்  எம்மிடம் அறிக்கைகள் உள்ளன.



அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளிடம் இருந்து நாம் தகவல்களைக் கோரியுள்ளோம். எனினும், சில நாடுகள் அந்தத் தகவல்களை வழங்க மறுத்துள்ளன.



இலங்கையுடன் போருடன் தொடர்புடைய பரஸ்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே அந்த விவரங்களை சட்டபூர்வமாக வழங்க முடியும்.



காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால், காணாமல் போனவர்கள் இப்போது அவ்வாறு கேள்வி எழுப்பும் அமைப்புகளுடன் தொடர்புடைய நாடுகளிலேயே வாழ்கின்றனர்.



எங்களுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதை சர்வதேச அமைப்புகளை நம்ப வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.



எவ்வாறாயினும் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுச் சான்றிதழ்களை வழங்க அரசு ஏற்கனவே முன்வந்துள்ளது. ஆனால், உறவினர்கள் அதனை மறுத்துள்ளனர்.



அத்தோடு தமது உறவுகள் எங்கே, அவர்கள் இறந்துவிட்டார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்று விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. அதேவேளை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அரசு கருதவும் முடியாது. எனவே, அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களைக் கொடுக்க முடியாது.



1988ஆம் ஆண்டில் காணாமல்போன நபர்கள் சிலர், சமீப ஆண்டுகளில் வீடு திரும்பினர் எனக் கூறப்படுகின்றது. நாங்கள் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்

Jul14

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு

Aug23

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர

Oct19

யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ

Aug06

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

May03

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும

Mar25

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Apr01

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Jul30

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே

Sep20

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Jul15

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்

Sep15

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (04:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (04:20 am )
Testing centres