ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமடைந்த 13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த சிதம்பரம் விடுதி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி உயிரிழந்த நிலையில், 3 வயது மகளை தம்பி செந்தில் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். தற்போது 13 வயதான அந்த சிறுமி, அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சித்தப்பாவான செந்தில், சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்ட நிலையில் சிறுமி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, கீரமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையின்போது சிறுமியின் வயிற்றில் 7 மாத சிசு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சித்தப்பா செந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, செந்தில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் அ.தி.மு.க.  உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ
