சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றி வைத்தார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்துவைத்தார் கே. எஸ். அழகிரி. இதில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை அணிந்து நடிகர் சிவகுமார் அந்த நிகழ்வில் பங்கேற்றார் . நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார்.
முன்னதாக மரைந்த ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி பவனில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்றிருந்தார்.
தற்போது காந்தியின் கைராட்டை திறப்பு விழாவிலும் சிவகுமார் பங்கேற்று இருப்பதால் , சிவகுமார் தன்னை காங்கிரஸ் அனுதாபியாக காட்டி கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மேலும் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.


பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும
நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு
