தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அந்நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தென்ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவமனையில் சேர்க்க தூண்டியது. சிறையில் முன்னாள் அதிபரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என்றார்.
அதேவேளையில், ஜேக்கப் ஜூமா உடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலக
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக
அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்ட
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
