தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அந்நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தென்ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவமனையில் சேர்க்க தூண்டியது. சிறையில் முன்னாள் அதிபரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என்றார்.
அதேவேளையில், ஜேக்கப் ஜூமா உடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
ஜனவரி 18 , 2021
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ர சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அ மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
