நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதற்கமைய, 118 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும், 2 பெண்களுமாக 17 பேர் மரணித்தனர்.
ஏனைய 101 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும், 37 பெண்களுமே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 79 ஆண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த ஆண்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 104 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன், 39 பெண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 236 ஆக அதிரிகரித்துள்ளது.
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
