கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத்தை விளங்கிக்கொள்ளாமலேயே இராணுவ தளபதி பேசி இருக்கின்றார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது இது தொடர்பில் கவலையடைகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இராணு தளபதி சவேந்திர சில்வாவின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு தொடர்பில் கவலையடைகின்றோம். ஏனெனில் தலைவர் ரணில் விக்ரமசிங்க இராணுவ தளபதி தொடர்பாகவோ இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்பாகவோ விமர்சிக்கவில்லை. அதேபோன்று தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாகவோ தடுப்பூசி ஏற்றும் இடம் தொடர்பாகவோ கதைக்கவில்லை. இதனை புரிந்துகொள்ளாமலேயே இராணுவ தளபதி இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார்.
அத்துடன் சுகாதார சட்டத்துக்கமைய யாரேனும் ஒருவர் தடுப்பூசி எந்த இடத்தில் பெற்றுக்கொண்டார் என அறிவிப்பு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது நோயாளரின் உரிமையாகும். அதனால் இந்தளவு சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பொன்றை தெரிவிக்கும் நிலைமைக்கு இராணுவ தளபதி சென்றமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
