நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்கிறோம் என்று மக்கள் கூறுவதாலேயே நாட்டை முடக்காது வைத்திருக்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே இராணுவத் தளபதி இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நேரத்தில் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறி வருகின்றனர். ஆனால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நாட்டை முடக்காது இருக்கின்றோம்.
இதன்படி மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியுமாக இருக்கும்.
இதனால் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
