தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள "துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அதர்வா முரளி கூறும்போது, ‘இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.
நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
தென்னிந்தியளவில் மிக
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
பொன்ராம் இயக்கத்தில்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜ
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
