இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
