கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்றார்.
முன்னதாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அவருடன் முன்னாள் மந்திரி சிவராம் ஹெப்பார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் காரில் சென்றனர்.
முதல் மந்திரியின் காரை பின்தொடர்ந்து சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான காரும் சென்றது. அவர்கள் கோகுல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான கார், முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அந்த காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
இதில் அந்த காரில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். சிவராம் ஹெப்பார், முதல் மந்திரியின் காரில் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார்.
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா
‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
