டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்தியா சார்பில் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.
யஷாஸ்வினி ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 94, 98, 94, 97, 96, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 574-11x அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. இதனால் யஷாஸ்வினி 13-ம் இடத்தையே பிடித்தார்.
இதேபோல், மானு பாகெர் ஒன்று முதல் ஆறு சீரிசில் 98, 95, 94, 95, 98, 95 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 575-14x 12ம் இடம் பிடித்தார்.
முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தனர்.
சீன வீராங்கனை முதலிடமும், கிரீஸ் வீராங்கனை 2-வது இடமும், ரஷ்ய வீராங்கனை 3ம் இடமும் பிடித்தனர்.
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
