இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று வரை 8,439,469 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் 6,693,072 பேர் முதலாவது தடுப்பூசிகளை மாத்திரம் செலுத்தி கொண்டவர்கள் என தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 1,746,397 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதில் பெரும்பாலானோருக்கு சைனோபாம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி 6,265,371 சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய 4,919,323 பேர் சைனோபாம் முதலாம் தடுப்பூசியையும், 1,346,048 பேர் சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
