தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொய்யான வாக்குறுதியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளது. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். தி.மு.க. மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். இந்த விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும்.
பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசிய விஷயங்களை இப்போது பேச வேண்டியது தானே. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
தமிழகம் முழுவதும்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
