கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .முதல்வராக தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தி வந்த நிலையில் எதியூரப்பா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் , கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை 16 இல் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, அமித் ஷா ம், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி உள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது. எடியூரப்பா ராஜினமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க
