கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .முதல்வராக தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தி வந்த நிலையில் எதியூரப்பா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் , கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை 16 இல் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, அமித் ஷா ம், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி உள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது. எடியூரப்பா ராஜினமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்
உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண
நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்
பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட
வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
