கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .முதல்வராக தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தி வந்த நிலையில் எதியூரப்பா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் , கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை 16 இல் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, அமித் ஷா ம், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி உள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது. எடியூரப்பா ராஜினமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று
