பிக்பாஸ் பிரபலம் யாஷிகா கடந்த சனிக்கிழமை இரவு மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பவானி யாஷிகா உடன் கடந்த சனிக்கிழமை பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.
தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் யாஷிகாவிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் யாஷிகா காரை ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் பொலிசார் விசாரணையில் கூறப்படுகிறது.
அதிவேகமாக காரை ஓட்டி வந்த யாஷிகா கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளார். யாஷிகா கார் ஓட்டி வந்த போது அவரது தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் அவர் விபத்து ஏற்பட்டபோது காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான
இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப
