நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு தோல்வியை சந்தித்தது. அக்கட்சியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தோல்வியுற்றார். ம.நீ.மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளும் தோல்வியை சந்தித்தன.
தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர்
மதுரவாயல் சட்டமன்ற வேட்பாளராக களமிறங்கிய பத்மபிரியா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உடுமலைப்பேட்டை வேட்பாளர் ஸ்ரீநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் தமிழக பொறுப்பாளர் தினேஷ்ராவ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்வின் போது கே.வி.தங்கபாலு , ஜோதிமணி எம்.பியும் உடன் இருந்தனர். ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தது குறித்து ஜோதிமணி ‘’தலைவர் ராகுல்காந்தி அவர்களின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைய ஏராளமான இளைஞர்களும் பெண்களும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி உறுதியோடு களத்தில் நின்று மக்கள் விரோத மோடி அரசை வரும் தேர்தலில் வீழ்த்தும். மகிழ்ச்சி ஸ்ரீநிதி. இணைந்து பயணிப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு
தமிழகத்தில்
கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி தமிழகத்தில்
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க
