கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84). இவர், பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவனையிலேயே தினமும் பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
