சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் கோவில் நிலங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு காணாமல் போன சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சிலைகளை மீட்பதற்கான திட்டங்கள் விரைவில் வகுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் கோவில்காளை கிடங்குகளில் அரசு கற்கள் மணிகள் இருக்கும் அவற்றை நீக்கி உயர்ந்த கற்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, அறநிலை துறை சார்பில் சென்னையில் இரண்டு பெண்கள் கலை கல்லூரிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கல்லூரிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அணிகள் நாட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.