ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல் பெல்ஜியத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
வீடுகள் இடிந்து விழுந்ததாலும், வெள்ளத்தில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாசன்பெர்க் அணை உடைந்ததால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 700 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 133 பேரும், பெல்ஜியத்தில் 24 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் நெதர்லாந்திலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், லிம்பர்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர
அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர் உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா 1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
