கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் கொரோனா பரவலை தடுக்க மிக முக்கியமான ஒன்று முகக்கவசம். இதனால் மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பலர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பெயரில் மூக்கை முழுமையாக மூடாமல் வாயை மட்டும் மூடுவது, தாடை பகுதியில் முகக்கவசத்தை வைத்துக் கொள்வது , சட்டை பாக்கெட்டில் முகத்தை வைத்துக் கொள்வது என பாதுகாப்பு குறைபாடு உள்ள அம்சங்களுடன் சுற்றி திரிகின்றனர். ஆனால் முகக்கவசம் அணிவதால் சிலரால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு பின்னர் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதின் நிலை குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 842 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதேபோல் சமூக விதிகளை கடைபிடித்து 30 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
நாடாளுமன்ற மழைக்காலக்
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
