கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சில தனியார் பள்ளிக்கூடங்கள் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கின்றன. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
எனினும் போதிய வசதி இல்லாத குழந்தைகள், தொலைக்காட்சி மூலம் கல்வி பயில இயலாத நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நேரடியாக பயின்றால்தான் பாடங்களை நன்கு கற்பதற்கு முடிகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் தங்களது பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாடங்களை பயிற்றுவிக்கின்றனர்.
அதன்படி நேற்று மூலைக்கரைப்பட்டி மறவன்குளத்துக்கு சென்ற ஆசிரியர்கள், அங்குள்ள மரத்தடியில் மாணவர்களை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமரச்செய்து பாடங்களை பயிற்றுவித்தனர். கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பு செய்வதை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என்றும் விளக்கி கூறினர். மாணவர்கள் கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்களை தலைமை ஆசிரியை அகஸ்டினா பாராட்டினார்.
சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
