More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!
Jul 13
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு- மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்றால் வேலை இழந்துள்ள பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.



மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இது அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.



பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தங்களது பெயர் உள்ள மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைத்தனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒரு சில மாணவர்கள் சம மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இடங்களை ஒதுக்குவது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் 19-ந் தேதி காலியிட விவரங்கள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.



அவர்களுக்கு 21-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 22-ந் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23-ந் தேதி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் பின்னர் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.



மாணவர் சேர்க்கை நடைபெறும்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற

Apr04

தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Jul18

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க

Jul11

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா

Feb26

காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப

Jul10

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட

Oct21

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த

Jun26

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த

Jan21

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து

May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Jul01

மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க

Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Sep26

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:12 am )
Testing centres