முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் கேப்பாபிலவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் அவர்களது முறையற்ற தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை கண்டித்து முல்லைத்தீவு நகரம் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
முல்லைத்தீவு நகர் மற்றும் கேப்பாபுலவு விமானப்படை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேப்பாபிலவு விமானப்படை தளத்துக்கு முன்னாள் காவற்துறையினர் விமானப்படையினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
இதேவேளை கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமிற்கு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் வருவதற்கு பல்வேறு வீதி தடைகளில் தடை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது


எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய
