சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கு வைரஸ் காய்ச்சலை தடுக்க ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ தொற்று குறைந்திருக்கும் சூழலில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தென்மேற்கு பருவக் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு
தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)
தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி
