பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டசு அணையில் நீர்மின்திட்டம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவை சேர்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். உப்பேர் கோஹிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த பணிக்காக தொழிலாளர்கள் பேருந்தில் சென்று வருவார்கள்.
அவ்வாறு இன்று பேருந்தில் செல்லும்போது, திடீரென பஸ் வெடித்து சிதறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 39-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பேருந்திற்குள் இருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.
காயம் அடைந்தவர்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க அரசின் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25
ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கா
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவத்தின் 'முதுகெலும
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
