பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டசு அணையில் நீர்மின்திட்டம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவை சேர்ந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். உப்பேர் கோஹிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த பணிக்காக தொழிலாளர்கள் பேருந்தில் சென்று வருவார்கள்.
அவ்வாறு இன்று பேருந்தில் செல்லும்போது, திடீரென பஸ் வெடித்து சிதறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 39-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பேருந்திற்குள் இருந்த பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.
காயம் அடைந்தவர்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க அரசின் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
