More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!
Jul 07
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்தார். அப்போது மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்தார் அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.



பின்னர் திருவாரூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டூரில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கேயே இரவு தங்கி ஓய்வு எடுத்தார்.



இன்று (7-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரூ.10½ கோடி மதிப்பில் மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் (தாய்-சேய் நலப்பிரிவு), 4 அறுவை சிகிச்சை மையங்கள் கட்டப்பட்டுள்ளது. 70 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து கார் மூலம் திருக்குவளையில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்று அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திருவெண்காடு சென்று மதிய உணவுக்குப்பின் கார் மூலம் சென்னை திரும்புகிறார்.



தமிழக முதல்வராக பதவியேற்று முதல்முறையாக சொந்த ஊரான திருவாரூருக்கு வந்த மு.க.ஸ்டாலினை பொதுமக்களும் தி.மு.க.வினரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம

Sep21

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள

Mar01

பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி

May11

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட

Aug30

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க

Apr02

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா

Jan17

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல

Feb24

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ

Jun10
Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Mar13

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத

May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்

Jan17

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக

Apr11

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (17:27 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (17:27 pm )
Testing centres