More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இலங்கை-இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
இலங்கை-இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
Jul 10
இலங்கை-இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 



இதில் அந்த அணி–யின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.



இதற்கிடையே, அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் 2 நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.



இந்நிலையில், கொழும்பில் வரும் 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ம் தேதி நடக்–கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ம் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரி–கிறது.



போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து இருக்கிறது. 



இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி தொடங்–கும். வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Sep23

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை  இடம்

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Jun25

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற

Aug28

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம

Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Mar14

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Oct23

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்

Jul24

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ

Mar09

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:50 am )
Testing centres