பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
அதுமட்டுமின்றி இந்திய- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாக அவர் திகழ்ந்தார்.
இந்த நிலையில் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ,“ திலீப்குமார் காலமானதை அறிந்து வருந்துகிறேன். எனது தலைமுறையில் திலீப்குமார் மிகச் சிறந்த மற்றும் பன்முக நடிகராக இருந்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனைகளை அமைப்பதற்கு நிதி திரட்ட தனது நேரத்தை வழங்குவதில் அவரின் தாராள மனப்பான்மையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பாகிஸ்தான் மற்றும் லண்டனில் அவரின் தோற்றம் மிகப் பெரும் தொகையை திரட்ட உதவியது” என தெரிவித்துள்ளார்.
பெஷாவர் நகரில் உள்ள திலீப்குமாருக்கு சொந்தமான வீட்டை தேசிய பாரம்பரிய சொத்தாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
