More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
Jul 08
மாநில அரசுகளிடம் 1.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தொடக்கம் முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகளால் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



அதிலும் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகம் அதிகரித்து இருக்கிறது.



இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.



இதைப்போல தனியார் ஆஸ்பத்திரிகளும் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உற்பத்தியாளர்களின் 25 சதவீத தடுப்பூசிகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.



இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 37.43 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு உள்ளன.



இதில் நேற்று காலை வரை 35.75 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதன்மூலம் 1.67 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.



இதைப்போல மேலும் 48.65 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.



இதற்கிடையே இந்த மாதத்தில் (ஜூலை) இதுவரை 2.19 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.



முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் 32 சதவீதம் குறைவாகவே தடுப்பூசி வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்த மாதம் கிடைக்கும் மொத்த தடுப்பூசி அளவு குறித்து ஏற்கனவே மாநில அரசுகளுக்கு தெரிவித்து இருப்பதாகவும், அந்தவகையில் இந்த மாதத்துக்கான 12 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களில், 2.19 கோடி டோஸ்கள் வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.



அதேநேரம் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்பட்டால், அது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி

Aug18

சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை

Jul24

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட

Jan31

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத

Jan19

கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே

Jan07

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்

May27

கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந

Apr24

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Jun30
May04

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Jul13

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Mar26

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (04:04 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (04:04 am )
Testing centres