நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை? என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான நேற்றைய களப் பயணத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சீன தொடர்பாக எதிர்க்கட்சியினருக்கே அதிக பிரச்சினை இருக்கின்றது. அரசுக்கு எந்த நாடு உதவி செய்தாலும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கும் சீனா உதவ முன்வந்தால், நாம் அதனையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது, விமான நிலையத்தின் தேவைப்பாடு அதிகம் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம். சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சூழலை அமைக்க வேண்டும்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் போன்ற திட்டங்களைப் பஸில் ராஜபக்ச முன்னெடுத்தார். பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருவது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
