ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற திட்டத்தின்கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் விதமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன
இன்றையதினம் இந்த செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களை நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்ப பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பாரம்பரிய முறையிலான எள்ளெண்ணை உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
