தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார் , எம்.உதயகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் , பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும், ஜே.வி.பியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க .,பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றனர்.
தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமானால் அது முற்போக்கு சிந்தனையுடன், ஜனநாயகத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்கள் மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கொள்கை ரீதியில் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இந்தச் சந்திப்பு தொடரவுள்ளது
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
