கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோ–விச் (செர்பியா), 20-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினை (சிலி) சந்தித்தார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றியை ருசித்து காலிறுதிக்குள் கால் பதித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக் குடியரசு) வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிர் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி கண்டனர்.

2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
