ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வழிபடவும், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் உடை மற்றும் உடைமைகள் அடங்கிய பைகள், பெட்டிகள் ஆகியவற்றை பக்தர்கள் கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் டோக்கன் பெற்று பைகள், பெட்டிகளை வைத்து விட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் டோக்கனை திரும்ப வந்து ஒப்படைத்து பை, பெட்டிகளை பெற்றுச் செல்வார்கள்.
இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கோவிலின் முதல் மற்றும் 4-வது கோபுரம் அருகில் பக்தர்களின் உடைமைகள் அடங்கிய பை, பெட்டிகளை சோதனையிட ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டன.
அந்த மையங்களை நேற்று ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டி தொடங்கி வத்தார். நிகழ்ச்சியில் கோவில் அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்கேன் மையங்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜை செய்தனர்.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
