மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27-ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் முடிந்து 7-வது மாதத்தைத் தொட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போராட்டம் தொடங்கி 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்கு உரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும
தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த
இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ
பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ்
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
