ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என கூறி உள்ளார்.
ஆனால், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சட்டப்பேரவை தேர்தல் இப்போது வேண்டாம் என பெரும்பாலான ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கூறி உள்ளனர்.
இதே கருத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்குவதையே காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற கட்சிகள் மற்றும் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதன்பின்னர் தேர்தல்களை விரும்புகிறார்கள். ஆனால், முதலில் தேர்தல், அதன்பிறகே மாநில அந்தஸ்து என்பதே அரசில் பதிலாக உள்ளது.
குகுதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. அதேபோல், ஒரு மாநிலம் தேர்தலை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்கள் மட்டுமே சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்கும். அரசாங்கம் ஏன் முன்னால் வண்டியையும் பின்னால் குதிரையையும் கட்டி இழுக்க விரும்புகிறது? இது வினோதமானது’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங் போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்
