நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்சி பெற்று வருகின்றன. மக்களிடம் தடுப்பூசி பற்றிய தயக்கம்போய் ஊக்கமும், முனைப்பும் வந்துள்ளது.
இந்த தருணத்தில் 176 பழங்குடி மாவட்டங்களில் 128 மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய சராசரி அளவை விட இங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தியோர் சராசரி 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 951 ஆகும்.
இதுவே பழங்குடி மாவட்டங்களில் 10 லட்சத்துக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 375 ஆக உள்ளது. இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.
இதேபோன்று ஆன்லைனில் தடுப்பூசி பதிவு சராசரி 81.19 சதவீதம் ஆகும். ஆனால் பழங்குடி மாவட்டஙக்ளில் நேரில் வந்து தடுப்பூசி போடுவோர் சராசரி 88.12 சதவீதம் ஆகும்.
இது பழங்குடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதை படம் பிடித்துக்காட்டுகிறது.
ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
மத்திய நிதி மந்திரி
