More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்!
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்!
Jun 20
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்!

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.



இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும்



பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.



இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.



பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது



எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.



சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.



இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.



சிகை அழங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Sep02
Oct02

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று

Jun11

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி

Apr30

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர

Apr08

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக

Mar28

பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

Oct05

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு

Mar25

உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப

Oct04

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு

Jan11

நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்

Jun01

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்

Jan19

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ

Oct05

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres