முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாது.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தடுப்பூசி திட்டத்தில் கவனம் செலுத்தும். அடுத்த 10 நாள்களுக்கு தினந்தோறும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால், ஜூலை மாதத்திலும் அசாம் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த மாதத்திற்குள் தடுப்பூசி போடுமாறு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். பிற அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொழிலாளர்கள், மக்களை ஊக்குவிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப் தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந