More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கவர்னரை திரும்ப பெறுமாறு மோடிக்கு 3 முறை கடிதம் எழுதினேன் - மம்தா பானர்ஜி சொல்கிறார்!
கவர்னரை திரும்ப பெறுமாறு மோடிக்கு 3 முறை கடிதம் எழுதினேன் - மம்தா பானர்ஜி சொல்கிறார்!
Jun 18
கவர்னரை திரும்ப பெறுமாறு மோடிக்கு 3 முறை கடிதம் எழுதினேன் - மம்தா பானர்ஜி சொல்கிறார்!

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவருக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் ஏற்பட்டு வருகிறது.



அதிலும் குறிப்பாக, மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து அங்கு நடைபெற்ற அரசியல் மோதல் தொடர்பாக கவர்னருக்கும், அரசுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது.



இந்த நிலையில் ஜெக்தீப் தாங்கர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்றார். அங்கு ஜனாதிபதி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகிறார்.



அவரது டெல்லி பயணம் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.



அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இது குறித்து நான் என்ன கூறுவது? குழந்தையை அமைதிப்படுத்தலாம், ஆனால் பெரிய மனிதரை எப்படி அமைதிப்படுத்துவது? இந்த விவகாரத்தில் மவுனமே சிறந்த பதிலாக இருக்கும்’ எனக்கூறி விரிவாக எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.



கவர்னரை மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு, ‘எனக்கு எப்படி தெரியும்? ஒரு கவர்னரை நியமிக்கும்போது, அந்த மாநில அரசுடன் ஆலோசிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அது எதுவும் நடக்கவில்லை. கவர்னர் தாங்கரை நீக்குமாறு பிரதமருக்கு 2 அல்லது 3 முறையாவது கடிதம் எழுதியிருப்பேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை’ என்று தெரிவித்தார்.



அரசியல் சாசன விதிமுறைகளை மீறி வருவதாக கவர்னரை தொடர்ந்து சாடி வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, டெல்லியில் இருந்து மீண்டும் மேற்கு வங்காளத்துக்கு திரும்ப வேண்டாம் என அவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.



இதைப்போல கவர்னர் தாங்கர், பாகுபாட்டுடன் செயல்படுவதாக இடதுசாரிகளும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந

Sep16

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்

Jun09
May05

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால

Sep26

பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக

Jan26

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு

Aug26

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க

Mar26

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற

Dec21

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த

Oct14

ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக

Apr01

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Feb10

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்

Jul16

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங

May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (14:34 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (14:34 pm )
Testing centres