இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த புதிய வகை கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 8,125 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்துக்கு பின் அங்கு பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு வைரஸ் என இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.
இதனிடையே இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21-ந் தேதி முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால் டெல்டா மாறுபாடு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதை தாமதப்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர
